×

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி!

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி கடுமையாக விமர்சித்து யூடியூபில் சூர்யாதேவி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது
 

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால்  திருமணம்  பற்றி கடுமையாக விமர்சித்து யூடியூபில் சூர்யாதேவி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது  காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். வனிதா கஞ்சா வியாபாரி என அவதூறான வார்த்தைகள் பேசி தனது மனதை புண்படுத்தி உள்ளதால், வனிதா மீது நடவடிக்கை கோரி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையில் சூர்யாதேவியும்  புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து வனிதாவை விமர்சனம் செய்த சூர்யா தேவிவை கடந்த 23 ஆம் தேதி வடபழனி மகளிர் போலீசார் கைது செய்த நிலையில் அன்றைய தினமே அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாதேவி கைதானபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல்நிலையத்தில் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் உண்டாகியுள்ளது.