பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் : மீண்டும் கேள்விக்குறியாகும் வனிதாவின் திருமண வாழ்க்கை!

 

பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் : மீண்டும் கேள்விக்குறியாகும் வனிதாவின் திருமண வாழ்க்கை!

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார். தற்போது வனிதா தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் : மீண்டும் கேள்விக்குறியாகும் வனிதாவின் திருமண வாழ்க்கை!

நேற்று நடிகை வனிதா இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார் : மீண்டும் கேள்விக்குறியாகும் வனிதாவின் திருமண வாழ்க்கை!
இந்நிலையில் பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், ‘தமக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளார். நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். தன்னை முறையாக விவாகரத்து செய்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதை பின்பற்றாமல் தற்போது வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்’ என்று அந்த புகாரில் எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார். இதனால் வனிதாவின் திருமண வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.