கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

இதனிடையே பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் இறுதித் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டன. இதனால்  கல்லூரி இறுதி பருவத் தேர்வு ரத்து செய்யக் கோருவது பற்றி யுஜிசி, மத்திய- மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

இந்நிலையில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி பருவத்தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

மேலும் பலவகை தொழில்நுட்ப நுட்ப பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், முதுநிலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், பொறியியல் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.