அரியலூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

 

அரியலூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில் 11 புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அரியலூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

 

இந்த நிலையில் அரியலூரில் தொடங்க உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.347 கோடி செலவில் 10.83 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ள இந்த மருத்துவமனை அரியலூர் தெற்கு கிராம பகுதியில் அமைய உள்ளது. மேலும் மொத்த செலவில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.