மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதில் தகராறு… இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதில் தகராறு… இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கிருஷ்ணகிரி

ஓசூரில் மகனின் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகரறில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குப்புசாமி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகள் ஶ்ரீஅபூர்வா(32). இவருக்கும், அதே பகுதியை அருண்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதில் தகராறு… இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதனிடையே, ஶ்ரீஅபூர்வா தனது மகனின் பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமான அளவில் கொண்டாட வேண்டும் என அருண்குமாரிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், மனமுடைந்த ஶ்ரீஅபூர்வா, கடந்த 4ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர அளித்தும் பலனின்றி நேற்று ஶ்ரீஅபூர்வா உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.