மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, கணவர் தற்கொலை!

 

மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, கணவர் தற்கொலை!

திருச்சி

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாங்கனாப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன்(41). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி சின்னப்பொண்ணு. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னபொண்ணுவை பிரிந்த ஆண்டியப்பன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, கணவர் தற்கொலை!

இந்த நிலையில், ஆண்டியப்பன் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆண்டியப்பன் – அழகம்மாள் இடையே தரகாறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆண்டியப்பன், அழகம்மாளை அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, மனைவியை வெட்டிய ஆண்டியப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.