கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

 

கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

விழுப்புரம்


விழுப்புரம் அருகே கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.குன்னத்தூரை சேர்ந்தவர் ஜோதி . இவரது மகள் நர்மதா(19). தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இதனிடையே, தந்தை உயிரிழந்ததால் ஏனாதிமங்கலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் நர்மதா வசித்து வந்தார். அப்போது, அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நித்தியானந்தன் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

நித்யானந்தன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நர்மதாவை, பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்து உள்ளார். இதனை அறிந்த, உறவினர்கள், நர்மதாவை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது, நித்யானந்தன் மறுத்துவிட்டார். இதனால், நர்மதாவின் கருவை அவரது உறவினர்கள் கலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை!

தன்னை காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த நர்மதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா உயிரிழந்தார்.

இது குறித்து, நர்மதாவின் தாயார் ஜோதி புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நித்யானந்தன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பு நர்மதா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது மரணத்திற்கு நித்தியானந்தன் தான் காரணம் என அவர் கூறி உள்ளார்.