காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

 

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலி தொழிலாளி. இவர், மூங்கில் தாங்கலை சேர்ந்த புவனேஸ்வரி என்பரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகாஷ்(6), தமிழ்செல்வன் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கணவர் கைது!

தொடந்து, நேற்று காலை புவனேஸ்வரியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்புகொண்ட பாண்டியன், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரது உறவினர்கள் சேத்துப்பட்டு சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், அவரது கழுத்தில் காயம் இருப்பதை பார்த்த உறவினர்கள், இதுகுறித்து கேட்டபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாண்டியன் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரியின் தந்தை கோவிந்தசாமி, மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக சேத்துப்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பாண்டியனை கைதுசெய்தனர்.