கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

கோவை

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேவி கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட தேவி, கடந்த 28ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்யை ஊற்றி தீக்குளித்தார். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை தேவி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.