மனைவி பிரிந்து சென்ற வேதனையில் மெக்கானிக் தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் மெக்கானிக் தற்கொலை!

நாமக்கல்

நாமக்கல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவர் அதே பகுதியில் இவசக்கர வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சந்திரா (40) என்ற மனைவியும், சசிகுமார்(21) என்ற மகனும் உள்ளனர். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியும், மகனும் பிரிந்து சென்று விட்டனர்.

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் மெக்கானிக் தற்கொலை!

இதனால், செல்வராஜ் தனியே வசித்து வந்த நிலையில், குடும்பத்தினர் பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். மேலும், வாழ்வில் விரக்தியடைந்த அவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.