கொரோனா நோயாளி விஷம் குடித்து தற்கொலை!

 

கொரோனா நோயாளி விஷம் குடித்து தற்கொலை!

கோவை

கோவை துடியலூர் அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சிரிலா திருப்பதி (27). இவரது மனைவி சிரிலா ஹேமலதா. இவர்கள் கோவை துடியலூர் அடுத்த கோவில்மேடு மஞ்சேஸ்வரி நகரில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், சிரிலா திருப்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா நோயாளி விஷம் குடித்து தற்கொலை!

தொற்று பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சிரிலா திருப்பதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்