குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

ராணிபேட்டை

ராணிப்பேட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள மேல் வெண்பாக்கத்தை சேர்ந்தவர் கதிர்வேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 வயதில் மகன் உள்ளான். கதிர்வேலுக்கும், சாந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை!

இந்த நிலையில், கடந்த மே 31ஆம் தேதி கதிர்வேல் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சாந்தியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். அத்துடன், திருமணமாகி 4 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால், இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.