பாமக பெண் நிர்வாகி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை!

 

பாமக பெண் நிர்வாகி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை!

சேலம்

சேலம் அருகே பா.ம.க பெண் நிர்வாகி, மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் கண்ணன்தேரி ஏரிக்காட்டு வளவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி சுமதி(49). இவர் மகுடஞ்சாவடி ஒன்றிய முன்னாள் சேர்மேனாகவும், பாமக மகளிரணி நிர்வாகி ஆகவும் பொறுப்பு வகித்து உள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமதி, தனது இளைய மகள் ஜமுனாவுடன் அறைக்கு தூக்கு சென்றுள்ளார்.

பாமக பெண் நிர்வாகி, மகளுடன் தூக்கிட்டு தற்கொலை!

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது அறை கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த முத்துச்சாமி, அறைக்கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தார். அப்போது, சுமதியும், அவரது மகள் ஜமுனாவும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.