வாழப்பாடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை!

 

வாழப்பாடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை!

சேலம்

வாழப்பாடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பெரமன் (27). விவசாயி. இவருக்கு 7 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கல்லூரி படிப்பை முடித்துள்ள ஷாலினியை, கணவர் வீட்டார் கால்நடை மேய்க்கவும், விவசாய பணிகளிலும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

வாழப்பாடி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை!

இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாமனார் – மாமியாருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தும், அவர் எதுவும் செய்யாததால் மனமுடைந்த ஷாலினி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷாலினியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை குமரேசன் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை காரணமா? என சேலம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.