சிவகாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை!

 

சிவகாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை!

விருதுநகர்

சிவகாசி அருகே மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜானகி (75). இவரது மகன் சுப்புராஜ். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 4 ஆண்டுகளில் அவர் பிரிந்து சென்றுள்ளார்.

சிவகாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை!

இதனால் ஜானகியும், சுப்புராஜும் தனியே வசித்து வந்துள்ளனர். தனது மகனின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்ததை எண்ணி ஜானகி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த ஜானகியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.