“பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் ‘கேப்டன் கூல்’ தோனி” : ஓபிஎஸ் புகழாரம்!

 

“பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் ‘கேப்டன் கூல்’ தோனி” : ஓபிஎஸ் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சக வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார்.

“பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் ‘கேப்டன் கூல்’ தோனி” : ஓபிஎஸ் புகழாரம்!

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தோனி குறித்து சச்சின், விராட் கோலி என கிரிக்கெட் வீரர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “எம்.எஸ். தோனி தனது கடின உழைப்பு மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் உள்ளுணர்வு மூலம் இந்தியா கிரிக்கெட்டில் வெற்றியின் உச்சத்திற்கு வந்துள்ளது. கூலாக இருந்து கொண்டே பாதகமான சூழ்நிலைகளை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்தார். அவர் எப்போதும் மக்களின் இதயத்தில் #captaincool ஆக இருப்பார்!” என்று பாராட்டியுள்ளார்.