தோனியின் ஓய்வு வேதனை அளிக்கிறது : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

 

தோனியின் ஓய்வு வேதனை அளிக்கிறது : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பையை பெற்று தந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு விக்கெட் கீப்பராக தனது பணியைச் சிறப்பாகச் செய்து வந்த அவர் விராட் கோலியை இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தி வந்தார்.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தோனி ஒரு சீனியர் வீரராக ஆலோசனைகளை வீரர்களுக்கு வழங்கி வந்ததால் தான் இந்த கூல் கேப்டனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தோனியின் ஓய்வு வேதனை அளிக்கிறது : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சுதந்திர தினமான நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் , “இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது வேதனையை தருகிறது. நெருக்கடியான தருணங்களில் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் கூல் அவர். கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனாகவும் தோனியின் பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிறகும் தோனியின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.