தோனியையே நானும் பின்பற்றுகிறேன்… நானும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: சுரேஷ் ரெய்னா

 

தோனியையே நானும் பின்பற்றுகிறேன்… நானும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: சுரேஷ் ரெய்னா

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.

தோனி அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும், தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களுடன் விளையாடுவதைத் தவிர வேற எதையும் விரும்பவில்லை தோனி. இந்த பயணத்தில் உங்களுடன் சேர நான் விரும்புகிறேன். உங்களுடைய முடிவையே நானும் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.