கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

 

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் காமராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.