தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

 

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் மக்கள் இந்த கடையில் தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்று இல்லாமல், எங்கு வேணாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இது குறித்து கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் திருநெல்வேலி தூத்துக்குடியில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

அதன் பின்னர் இந்த திட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் இத்திட்டத்தை அமல்படுத்த முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், அக்டொபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சோதனைக்காக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.