குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

அரியலூர்

அரியலூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சந்திரா (31) என்பவருடன் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சிவயோகன் (2) என்ற மகன் உள்ளான். சற்று பார்வை குறைபாடு உள்ள ரமேஷால் வேலைக்கு செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை – வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

இதனால் குடும்ப செலவிற்கு பணமின்றி தவித்து வந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த சந்திரா, நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயன்றபோதும், சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.