தோசை கருகியதால் கணவன் – மனைவி இடையே தகராறு… விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

தோசை கருகியதால் கணவன் – மனைவி இடையே தகராறு… விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை

கோவையில் மனைவி சுட்ட தோசை கருகியதால் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி(52) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், பழனி நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிடும்போது, மனைவி கருகிய தோசையை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி, இதுகுறித்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட பழனி, அங்கிருந்த மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோசை கருகியதால் கணவன் – மனைவி இடையே தகராறு… விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர். முன்னதாக, பழனி குடும்ப தகராறில் 4 முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றது தெரிய வந்துள்ளது.