மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால், கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி மேரிகில்டா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மதுஅருந்தி விட்டு சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி கில்டா கணவரிடம் கோபித்துக்கொண்டு, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், ஜெயக்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். மேலும், மேரிகில்டாவிடம் சேர்ந்து வாழ வரும்படி அழைத்த நிலையில், அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஜெயக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.