நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவிக்கு ஜாமீன்!

 

நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவிக்கு ஜாமீன்!

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவிக்கு ஜாமீன்!

இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா, பீட்டர் பால்  திருமணம்  பற்றி கடுமையாக விமர்சித்து யூடியூபில் சூர்யாதேவி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது  காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். வனிதா கஞ்சா வியாபாரி என அவதூறான வார்த்தைகள் பேசி தனது மனதை புண்படுத்தி உள்ளதால், வனிதா மீது நடவடிக்கை கோரி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையில் சூர்யாதேவியும்  புகார் அளித்துள்ளார்.

நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவிக்கு ஜாமீன்!

இதை தொடர்ந்து வனிதாவை விமர்சனம் செய்த சூர்யா தேவி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் இன்று காலை சூர்யா தேவியை கைது செய்தனர்.

நடிகை வனிதாவை விமர்சித்த சூர்யாதேவிக்கு ஜாமீன்!

இந்நிலையில் வனிதாவை சமூக வலைதளத்தில் விமர்சித்த வழக்கில் கைதான சூர்யா தேவி ஜாமீனில் விடுவீக்கப்பட்டுள்ளார். கைதாகி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது