வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

 

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு காலகட்டம் என்பதால் சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

கடந்த 4 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்று விட வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற அவர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சீனிவாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.