“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

 

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கார்ச்சா கிராமத்தில் போலா என்ற 23 வயது வாலிபரும் ,ப்ரியங்கா என்ற 20 வயது பெண்ணும் காதலித்தனர் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு நிலவியது .இதனால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர் .அதன்படி கடந்த புதன்கிழமையன்று இருவரும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு குடிசை வீட்டில் தங்களின் முதலிரவை நடத்திக்கொண்டிருந்தனர் .
இந்த விஷயம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எப்படியோ தெரிந்து விட்டது .இதனால் கோபமுற்ற அவரின் குடும்பத்தார், கூட்டமாக திரண்டு வந்து அவர்கள் முதலிரவு நடக்கும் போதே அந்த குடிசை வீட்டை தீ வைத்து கொளுத்தினார்கள் .இதனால் அந்த குடிசை வீடும் அந்த வீட்டிற்குள் இருந்த புது மண தம்பதிகளும் தீயில் கருகினர் .

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-
பிறகு உள்ளூர்காரர்கள் சிலர் குடிசை வீட்டிற்குள் புகுந்து , அந்த காதலர்களை தீ காயத்துடன் வெளியே இழுத்து வந்தனர் .பிறகு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ,அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதலில் காதலன் போலா இறந்தநிலையில் ,இரண்டாவதாக காதலி ப்ரியங்கா இறந்தார்
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இப்போது அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் ,பிரேத பரிசோதனை வியாழக்கிழமை செய்யப்படும் என்றார்.

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-