முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: மோடி, ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: மோடி,  ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல், 1999 வரை, 13 மாதங்கள், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில், பிரதமராக பதவி வகித்தார். பின், 1999- 2004 வரை, மீண்டும் பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார். லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: மோடி,  ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு சொந்தக் காரரான வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: மோடி,  ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வாஜ்பாய் செய்த சேவை மற்றும் முயற்சிகளை நாடு நினைவில் வைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.