சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் :வானிலை ஆய்வு மையம்!

 

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் :வானிலை ஆய்வு மையம்!

கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் :வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் :வானிலை ஆய்வு மையம்!

தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேக மூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.