தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது