21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காரணமாக சேலம், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக ஏற்காடு, பாப்பிரெட்டிபட்டியில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.