தமிழகத்தில் பாஜக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது : ஹெச். ராஜா

 

தமிழகத்தில் பாஜக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது : ஹெச். ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பாஜக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது : ஹெச். ராஜா

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, “வரும் பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு, அவர்களை மக்களும் புறந்தள்ள வேண்டும்” என்றார். இதை தொடர்ந்துகொரோனா பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து நடத்த கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறித்து கேட்ட போது,
நீட் தேர்வுக்கு கால அவகாசம் கொடுத்தும் மாணவர்களை தயார் செய்யாமல் இருந்தது யாருடைய தவறு? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது : ஹெச். ராஜா

முன்னதாக தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக கைகாட்டுபவர்களே ஆட்சி கட்டிலில் அமர்வார்கள் என கூறியுள்ளது தேர்தல் நெருங்குவதை சுட்டிக்காட்டுகிறது.