அதிமுகவை பாஜக இயக்குகிறதா? என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

 

அதிமுகவை பாஜக இயக்குகிறதா? என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக் கொண்டே வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் யார் வேட்பாளர் என்ற ஒரு புதிய சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. இந்த சர்ச்சைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பிள்ளையார் சுழி போட, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரே ஒரு ட்வீட்டால் பெரிய பிரச்னையாக மாற்றிவிட்டார். அதன் பிறகு முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் ஆலோசனை நடத்தி, கூட்டறிக்கை வெளியிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். மேலும், கட்சியின் தலைமை ஒப்புதல் இல்லாமல் எந்த தகவலையும் அமைச்சர்கள் சொல்லக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்தது.

அதிமுகவை பாஜக இயக்குகிறதா? என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் 2ஆவது தலைநகரம் மதுரையா? திருச்சியா? என அமைச்சர்களுக்குள்ளே போட்டி தொடங்கியுள்ளது. இதனிடையே பாஜகவால் தான் இத்தனை குழப்பங்களும் ஏற்படுவதாக கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுகவை பாஜக இயக்குகிறதா என செய்தியாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், மத்திய அரசுக்கு பின்னால் தான் மாநில அரசு இயங்குகிறது என்றும் தமிழகத்தில் அதிமுகவே ஆளும் என்றும் கூறியுள்ளார்.