சங்கரன்கோவில் அருகே வேன் மோதி புது மாப்பிள்ளை பலி!

 

சங்கரன்கோவில் அருகே வேன் மோதி புது மாப்பிள்ளை பலி!

தென்காசி

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகராஜ் (29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா தேவி. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று காலை முருகராஜ் தனது வீட்டில் இருந்து சங்கரன்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

சங்கரன்கோவில் அருகே வேன் மோதி புது மாப்பிள்ளை பலி!

ராஜபாளையம் சாலையில் புளியம்பட்டி அருகே சென்றபோது முருகராஜ் வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட முருகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.