கோவை அருகே லாரி மோதி காதல் ஜோடி உள்பட மூவர் பலி!

 

கோவை அருகே லாரி மோதி காதல் ஜோடி உள்பட மூவர் பலி!

கோவை

கோவை அருகே அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்களின் மீது, லாரி மோதிய விபத்தில் காதல் ஜோடி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி காளியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகன் ராமகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காதலர்கள் இருவரும் வேலந்தாவளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதனை கண்ட, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சித்திக், லிங்கேசன் ஆகியோர், இருசக்கர வாகனத்தில் காதலர்களை துரத்திச் சென்று உள்ளனர்.

கோவை அருகே லாரி மோதி காதல் ஜோடி உள்பட மூவர் பலி!

இதனால் ராமகிருஷ்ணன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ராமகிருஷ்ணன் மற்றும் பின்னால் வந்த சித்திக் ஆகியோரது வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த காதலர்கள் ராமகிருஷ்ணன், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், சித்திக், லிங்கேஸ்வரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேசன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.