காரைக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – காவலர் பலி!

 

காரைக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – காவலர் பலி!

சிவகங்கை

காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (34). இவர், சாக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ராஜா இன்று காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

காரைக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – காவலர் பலி!

காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த குன்றக்குடி போலீசார், விபத்து பகுதிக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.