“தோனி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்” :சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்!

 

“தோனி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்” :சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்!

தல , கூல் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சுதந்திரதின கொண்டாட்டத்தில் திளைத்திருந்த இந்திய மக்களுக்கு தோனியின் அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

“தோனி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்” :சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்!

தோனியை தொடர்ந்து ‘சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். தோனியின் ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தும் அவர் குறித்து புகழாரம் சூட்டியும் வருகின்றனர்

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மகேந்திர சிங் தோனி வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார் இது தவிர வேறு எதிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் கிரிக்கெட்டில் சிறப்பாக பணியாற்றிய தோனியின் தலைமைப் பண்பு பொது வாழ்வுக்கும் தேவை என்று அவர் பதிவிட்டுள்ளார்.