கன்னியாகுமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் தீவிரமாகும் தொற்று பாதிப்பு!

 

கன்னியாகுமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் தீவிரமாகும் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114  ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் தீவிரமாகும் தொற்று பாதிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு : விழுப்புரத்திலும் தீவிரமாகும் தொற்று பாதிப்பு!

இந்நிலையில் கன்னியாகுமரியில் மேலும் 167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,601 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இன்று ஒருவர் பலியானதை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 133 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று மொத்த எண்ணிக்கை 3,632 ஆக அதிகரித்துள்ளது.