மற்ற மாவட்டங்களில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா : நெல்லை, திருவாரூரில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

 

மற்ற மாவட்டங்களில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா :  நெல்லை, திருவாரூரில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா :  நெல்லை, திருவாரூரில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா :  நெல்லை, திருவாரூரில் தொற்று எண்ணிக்கை உயர்வு!

இந்நிலையில் திருவாரூரில் மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,309 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நெல்லையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் மொத்த தொற்று பாதிப்பு 3,785 ஆக அதிகரித்துள்ளது.