“அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்” : முதல்வர் பழனிசாமி உரை!

 

“அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்” : முதல்வர் பழனிசாமி உரை!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இருப்பினும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

“அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்” : முதல்வர் பழனிசாமி உரை!

இந்நிலையில் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையின் போது, “மக்களின் அன்பு ஆதரவைப் பெற்றுள்ள நான் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்” என்றார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியின் இந்த பேச்சு பரபரப்பான அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.