அண்ணா அறிவாலயத்தில் முதன் முறையாக தேசிய கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்
Aug 15, 2020, 08:44 IST1597461286000
74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் என பாதுகாப்பு வழிமுறை நெறிகளுடன் சுதந்திர தினம் கொண்டாட மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. அதன்படி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். திமுக அமைப்புச் செயலாளர்கள் தான் அறிவாலயத்தில் கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் இந்தமுறை சுதந்திர தினத்தையொட்டி முதல் முறையாக அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் மு.க ஸ்டாலின்.
இந்த நிகழ்ச்சியின் போது எம்பி டி. ஆர். பாலு, கே. என். நேரு, மா. சுப்ரமணியம், ஆர். எஸ். பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.