தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4வது முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார்!
Aug 15, 2020, 09:00 IST1597462228000
74வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும் என கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்புடன் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமை செயலகக் கோட்டை கொத்தளத்தில் 4 வது முறையாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சரோஜா, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.