குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை – கணவர் வெறிச்செயல்!

 

குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை – கணவர் வெறிச்செயல்!

கடலூர்

கடலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, கணவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரியை சேர்ந்தவர் கரிகாலன் (50). விவசாயி. இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கரிகாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பச்சையம்மாள், கணவரை கண்டித்துள்ளார். இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை – கணவர் வெறிச்செயல்!

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த விவகாரம் குறித்து கரிகாலன் – பச்சையம்மாள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கரிகாலன், வீட்டில் இருந்த கத்தியால் பச்சையம்மாளின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார், பச்சையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து, கரிகாலனை கைதுசெய்தனர்