சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை!

 

சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் (45). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள பள்ளிவாசல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர் மார்ட்டினை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயதங்களால் சரமாரியாக வெட்டினர்.

சாத்தான்குளத்தில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை!

இதில் படுகாயமடைந்த மார்ட்டினை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், ஏஎஸ்பி ஹரிசிங் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.