மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கொலை!

 

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே மதுஅருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஓட்டல் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி நங்கூரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அங்குள்ள ஓட்டலில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு ஈஸ்வரன், தனது சகோதரன் வினோ, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். இந்த நிலையில், இன்று காலை காளியாயன்விளையில் உள்ள கயிறு ஆலை அருகே ஈஸ்வரன் அடித்துக்கொல்லப்பட்டு, சடலமாக கிடந்தார்.

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கொலை!

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் தாக்கியதில் ஈஸ்வரன் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, தலைமறைவான ஈஸ்வரனின் சகோதரர் வினோ மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.