மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் போலீசில் சரண்!

 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் போலீசில் சரண்!

சிவகங்கை

சிவகங்கை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பர்கள் இருவர் போலீசில் சரணடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சரகுமார் (30). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் கேசவன்(30), ருத்ரன் (29). நண்பர்களான இவர்கள் மூவரும் அங்குள்ள சந்தையில் நாள்தோறும் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு மூவரும் சந்தையில் மது அருந்தி உள்ளனர். அப்போது, சரத்குமாருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் போலீசில் சரண்!

இதில் ஆத்திரமடைந்த கேசவன் மற்றும் ருத்ரன் ஆகியோர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரத்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, கொலையாளிகள் இருவரும் மதகுபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கேசவன், ருத்ரன் ஆகியோரை கைதுசெய்த மதகுபட்டி போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.