நெய்வேலி அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

 

நெய்வேலி அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

கடலூர்

நெய்வேலி அருகே இளைஞர் மர்மநபர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மந்தாரகுப்பத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் அருண்குமார் (35). கூலி தொழிலாளி. குற்ற வழக்கில் கைதான இவர், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

நெய்வேலி அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை – போலீசார் விசாரணை

இந்த நிலையில், என்.எல்.சி நிறுவனம் 2-வது சுரங்க நுழைவு வாயில் அருகே முட்புதரில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அருண்குமார் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மந்தாரகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில் மந்தாரகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து வெளிவந்த இளைஞர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.