தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை!

 

தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை!

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சுரேஷ் (40). இவருக்கும், அதிராம்பட்டினம் வாழைகொல்லை பகுதியை சேர்ந்த கூலி தொழலாளி சுரேஷ் (37) என்பவருக்கும் இடையே மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெயிண்டர் சுரேஷ் வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை அறிந்த, வாழைகொல்லை சுரேஷ் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வாழைகொல்லை சுரேஷ் அரிவாளால் பெயிண்டர் சுரேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் பெயிண்டர் சுரேஷின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு, தப்பியோடிய வாழைகொல்லை சுரேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.