ராசிபுரம் அருகே 8ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!

 

ராசிபுரம் அருகே 8ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!

நாமக்கல்

ராசிபுரம் அருகே 8ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் காதர்பீ. இவரது மகள் சுமையா (12). குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்த காதர்பீ, தனது மகளுடன் ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி சாலையில் உள்ள தங்கை பானுவின் வீட்டில் வசித்து வந்தார். சுமையா அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ராசிபுரம் அருகே 8ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!

இதனிடையே, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த சுமையா, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றியதால் அவர் அலறி துடித்தார். அதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சுமையாவை மீட்டு, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.