குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தேனி

தேனியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டி அருகே உள்ள டொம்புசேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளி. அவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதனால் காளியம்மாள் மனவிரக்தியுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நாகராஜ், மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காளியம்மாளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.