திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் கொரோனாவுக்கு பலி!

 

திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் கொரோனாவுக்கு பலி!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். திமுக பேரூர் செயலாளராக உள்ள இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் கொரோனாவுக்கு பலி!

தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு டயாலிஸிஸ் செய்து வந்த நிலையில் கடந்த 16ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக ஜெயச்சந்திரன் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் திமுக எம்எல்ஏ அன்பழகன் மரணமடைந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.